Monday, October 18, 2010

man on fire-2004 விமர்சனம்



பணத்துக்காக ஆட்கள் கடத்தும் கும்பல் உலகெங்கும் பரவிக்கிடக்கிறது.இது எப்பொழுது ஆரம்பித்தது,எங்கு ஆரம்பித்தது என்பதுதெரியவில்லை.ஆனால்,இன்று வரை கனஜோராக நடந்துகொண்டிருக்கிறது.ஒவ்வொரு மணிக்கும் ஏன்,ஒவ்வொரு நிமிடத்திற்கும் கூட உலகில் எங்காவது ஆட்கள் கடத்தப்பட்டுக்கொண்டுதானிருக்கிரார்கள். எல்லாமும் வெளியில் தெரிவதில்லை.அதேபோல் பணம் கொடுத்தாலும்,கடத்தப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை. அப்படி கடத்தல் கும்பலுடன் கதாநாயகன் மோதும் adventure action படம்தான் man on fire-.இந்த படத்தை அநேகம் பேர் பார்த்திருந்தாலும் நான் நேத்துதான் பார்த்தேன்.அதை உங்களுடன் பகிர்கிறேன்.

man on fire- திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

mexico city யின் பணக்கார வியாபாரி samuel ramos[marc anthony] அவர் மனைவி lisa martin ramos[radha mitchel].இவர்களின் செல்ல மகள் lupitha martin ramos[dacotta fanning] செல்லமாக 'pita'. சாமுவேலின் ஒன்பது வயது மகளுக்கு பாதுகாப்பாக ஒரு பாதுகாவலர் வைத்துக்கொள்ளும்படி,அவரின் வக்கீல் அறிவுறுத்துகிறார்.ஏனென்றால்" மெக்ஸிகோ சிட்டி யில் " அதிகரித்துவரும் கடத்தல் கும்பலிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற. செக்யூரிட்டி தலைமை அதிகாரியாக இருக்கும்Paul Rayburn[christober walken] இடம் உதவி கோரும்போது அவர் முன்பு தன்னுடன் c.i.a வில் வேலை செய்த நண்பன் John Creasy[Denzel Washington] என்பவரை சிபாரிசு செய்கிறார்.கிரேசி நிழலுக தீவிரவாத கும்பலை ஒழிப்பதில் திறமை உள்ளவர்.தற்போது மன வெறுப்பினால் வேலையிலிருந்து விடுபட்டு, வேலையில்லாமல் இருப்பவர்.பழைய நினைவுகளை மறப்பதற்காக எப்போதும் மதுவை நாடுபவர்.
கிரேசிக்கு பாதுகாவலாராக இருப்பதில் விருப்பமில்லை ஆனால்,வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறார்.சாமுவேலின் குடும்பத்தினர் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர் . பின்பு தனி அறைக்கு செல்கிறார் அவரால் பழைய நினைவுகளை மறக்க முடியாமல் மது அருந்திவிட்டு துப்பாக்கியால் தற்கொலைக்கு முயல்கிறார்.ஆனால் துப்பாக்கி வெடிக்காமல் அவருக்கு வாழ்க்கை கொடுக்கிறது. பின்பு 'பிதா' வுடன் பாதுகாவலராக தொடர்கிறார் குழந்தையின் கள்ளமில்லா பேச்சு அவர் மனதுக்கு மருந்திடுகிறது. 'பிதா'வுக்கு நீச்சல் பயிர்ச்சியாளராகி பள்ளி நீச்சல் போட்டியில் வெல்ல வைக்கிறார். பின்பு 'பிதா'வும் கிரேசியும் மிகவும் நெருக்கமாகி விடுகிறார்கள்.ஒரு நாள் பியானோ வகுப்புக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது பிதா வை இருவர் கடத்த வருகிறார்கள் பிதா வை காப்பாற்ற கிரேசி அவர்களுடன் துப்பாக்கியுடன் போராடுகிறார்.எனினும்,அவரை சுட்டுவிட்டு பிதா வை கடத்தி விடுகிறார்கள்.பத்திரிகை நிருபரான பெண் ஒருவர் உதவியுடன் குண்டு காயங்களுடன் பிதாவை கண்டுபிடிக்க கிளம்புகிறார்.அங்கு அவருக்கு நிறைய அதிர்ச்சி காத்துக்கொண்டிருப்பதை அறியாமல். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இத்திரைப்படம் A. J. Quinnell எழுதிய man on fire என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது .சாதாரண கதைதான் என்றாலும் திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றனர். இந்த மாதிரி பாத்திரத்துக்கு denzel washingdon மிகவும் பொருந்தி விடுகிறார். இந்தப்படத்தின் இயக்குனர் tony scott."gladiator" படம் இயக்கிய ridley scott தம்பி .இவர் இயக்கிய talking of belhalm 123 என்ற திரைப்படம் எனக்கு பிடித்த படம்.அதிலும் வாஷிங் டன் நடித்திருப்பார். ஆக்சன் வகை படங்களுக்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம் அதி திறம்பட செய்திருக்கிறார் paul cameron. ஹிந்தியில் இந்த கதையை கொண்டு அமிதாப் பச்சனை வைத்து 'ஏக் அஜ்னபி' என்ற படத்தை ரீமேக் செய்தார்கள். அஞ்சாதே படத்தில் கூட இந்த படத்தின் காட்சிகள் வரும் .

படத்தை பற்றிய மேலும் சில தகவல்.
Directed by Tony Scott
Produced by Lucas Foster
Arnon Milchan
Tony Scott
Written by Brian Helgeland
Starring Denzel Washington
Dakota Fanning
Christopher Walken
Giancarlo Giannini
Radha Mitchell
Marc Anthony
Rachel Ticotin
and Mickey Rourke
Music by Harry Gregson-Williams
Lisa Gerrard
Cinematography Paul Cameron
Editing by Christian Wagner
Studio Regency Enterprises
New Regency
Scott Free Productions
Distributed by 20th Century Fox
Release date(s) April 23, 2004 (2004-04-23)
Running time 146 minutes
Country United States
Language English
Budget $70 million
Gross revenue $130,293,714



man on fire trailer


பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் தந்து என்னை உற்ச்சாகப்படுத்துங்கள்.நன்றி!!

சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்



நித்யானந்தா -ரஞ்சிதா. இன்றைய நாட்களில் பதிவர்களால் அதிகம் விவாதிக்கப் படுபவர்கள். சாமியாராய் இருந்து கொண்டு சல்லாபம் செய்யலாமா ? என்பதுதான் .

இது ஒன்றும் இப்போது புதிதாக நடந்தது இல்லை. இதுபோல் தமிழகம் நிறைய கண்டிருக்கிறது. ஆனாலும்,நம் கூச்சல்கள் அடங்கவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் அரசாங்கம் அது திரும்ப நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வதும், பிறகு அதை மறந்து விடுவதும் பின்பு அதே பிரச்சினை திரும்ப வந்தவுடன் அதே நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் வாடிக்கைதான். காவிரி பிரச்சினை முதற்கொண்டு .அந்த மனநிலைமைதான் மக்களிடமும்.

மரணத்தின் மீதான பயம் மனிதர்களை ஆட்டுவிக்கிறது. சக மனிதனிடம் புரிதல் இல்லாததினால் அதிக பிரச்சினைகள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் போது சாமியார்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது "குருவி உட்கார பனம் பழம் விழும்" உடனே சாமியார் கடவுளாகிறார். நம் பிரச்சினை தானாக தீர்ந்தாலும் கூட சாமியார்தான் என்று நினைத்து நாம் அவரை பிரபலமாக்குவோம்.

உண்மையிலேயே சாமியார்கள் மக்களை நல்வழிப் படுத்தும் முயற்ச்சியில் இருந்தால் கூட நாம் அவரை புகழ் போதைக்கு அடிமையாக்கி விடுகிறோம்.பண போதைக்கு அடிமையாக்கி விடுகிறோம்.புகழுக்கு மயங்காத மனிதர்களே இல்லை எனலாம்.

பொதுவாக பெண்களோடு அதிகம் தொடர்புடை துறைகள்தான் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றன.இது ஏன் என்று புரியவில்லை?குறிப்பாக கல்வி,சினிமா,மருத்துவம்,ஆன்மிகம் இன்னும் பல. கொலை, கொள்ளை, மோசடி என்று அன்றாடம் குற்றங்கள் நடந்து கொண்டுத்தான் இருக்கிறது. நம் மக்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.ஆனால், சாமி,மதம்,ஜாதி,இன விசயங்களில் தவுறு நடந்தால் கொதித்துப் போகிறார்கள்.மனிதத்திற்கு மட்டும் இங்கு என்றுமே மரியாதையில்லை.


நித்யானந்தாவிடம், கோடிக்கணக்கில் சொத்து உள்ளது என்கிறார்கள். அவரிடம் மட்டுமல்ல நிறைய சாமியார்கள் பணத்தை உபயோகமில்லாமல் வைத்திருக்கிறார்கள் இங்கு,வேலூரில் ஒரு சாமியார் தங்கத்திலே கோவில் கட்டி வைத்திருக்கிறார்.அதனால் நாட்டுக்கு எந்தப்பலனுமில்லை.திருப்பதியில் கணக்கிட முடியாத அளவிற்கு பணம் ,நகை சொத்துக்கள் உள்ளன.அவைகளால் பொது மக்களுக்கு எள்ளளவும் பயனில்லை.மக்கள் இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு மனிதன் பசியோடு துடிக்கும்போது மீந்த உணவை சாக்கடையில் வீசி எறிவதுபோல.


கும்பகோணத்தில் தீயில் குழந்தைகள் வெந்த போது கடவுள் மீது எனக்கு வெறுப்பு ஏற்ப்பட்டது. என்ன பாவம் செய்தார்கள். தீயிலா போக வேண்டும் அவர்கள் உயிர். ஒரு துளி நெருப்பு பட்டால் நம் உடல் தாங்குவதில்லை. சதை பொசுங்கும் போது அந்த பிஞ்சுகள் எப்படி கதறியிருப்பார்கள். என்ன கொடுமையிது? இந்த வயதில் அவர்களுக்கு ஏன் இந்த தண்டனை? சாகத்தான் பிறந்தார்களேன்றால்,அவர்களை படைக்காமல் விட்டிருக்கலாமே?

மனிதர்களை நேசியுங்கள்! இயற்கையை நேசியுங்கள் !விட்டுக்கொடுத்து வாழப்பழகுங்கள்! விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போவதில்லை!மனிதர்களை தேடி உதவுங்கள் அப்பொழுதான் நமக்குதேவைப்படும்போது உதவி கேட்காமலே வரும். தேவையில்லாத கூச்சல் போடுவதை விட்டுவிட்டு அமைதியாய் இருங்கள்.அமைதி மனிதனை சிந்திக்க தூண்டும்.

இந்த விசயத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அன்பும், அமைதியும் அவரை உலகத்தின் மத்திக்கு இட்டுச் சென்றது. அந்த புகழ் கூட பாதிக்காமல் அமைதி அவரை காத்து நிற்கிறது.

கடவுள் எப்பொழுதுமே உங்களிடம் காசு எதிர் பார்ப்பதில்லை. அதை கோவிலில் கொட்டாமல் தேவைப் படும் மனிதனுக்கு உதவி செய்யுங்கள். அவனுக்கு அந்த இடத்தில் நீங்கள்தான் கடவுள்.

ஓடி ஓடி உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும், அன்பை நாளும் விதைக்கணும். அற்புதமான வரிகள்.அனுபவித்து பாருங்கள் .


இப்படித்தான் எதையோ சொல்ல நினைத்து எங்கோ முடிகிறது என் எண்ணங்கள்.






இதுவரை பொறுமையாக படித்த என் நண்பர்களுக்கு நன்றி! பின்னூட்டமும்,ஓட்டும் தந்து எனக்கு உறுதுணையாய் இருங்கள்.
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, February 22, 2010

குழந்தைகளை கவனிப்போம்!

இந்தப்பூமியில் நாம் பிறந்ததன் நோக்கம், இங்கு நமக்குள்ள வேலை என்னவென்று சிந்தித்தால்?

ஒரு நல்ல சந்ததியை உருவாக்குவதுதான். அதன் பொருட்டே உணவுதேடல்,பணத்தேடல் இன்னும்பிற. மற்ற உயிரினங்களின் வேலையும் அதுதான் என்றாலும், நாம் அதிலிருந்து வேறுபட்டு நிற்கிறோம்.

நம் குழந்தைகளுக்கு பணம், சொத்து மட்டும் சேர்த்து வைத்தால் போதும் என்று நினைப்பது, சுதந்திரமாய் திரியும் பறவைகளை கூண்டிலடைத்து வளர்த்து பெருமைப்படுவது போல். அவைகளை நாம் காப்பாற்ற வேண்டும் என்று அவசியமில்லை கூண்டை திறந்தாலே போதும் தனக்கான உணவை அது தேடிக்கொள்ளும். அதுபோல் நாமும் பிள்ளைகளுக்கு இறக்கைகள் வளரவிடாமல் தங்க கூண்டுகள் செய்துகொண்டிருக்கிறோம்.

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
என்கிறார் திருவள்ளுவர். ஆனால், நாம் கேட்கிறோமா என்றால் கேள்விக்குறிதான் .

பிள்ளைகளின் கேள்விகளை செவிமடுத்துக் கேட்டு,அதற்க்கு பதலளித்தால் அவர்களுக்கு வாழ்க்கை புரிந்துவிடும்.நாம் கவனிக்காது போனால் அந்த கேள்வி வேறிடத்தில் கேட்கப்பட்டு பதில் திரித்து கூறப்பட்டால், அவர்கள் தவறு அங்கிருந்து ஆரம்பமாகும்.ஒரு நல்ல சந்ததியை உருவாக்க நாம் பல நிலைகளை அவர்களோடு கடக்க வேண்டும்.தந்தையாக,ஆசிரியராக,நல்ல தோழனாக இப்படி பல நிலை.

என் சிறு வயதில் பள்ளியில் தர அட்டையை(ரேங்க் கார்டு) கொடுத்து பெற்றோரின் கையொப்பம் வாங்கி வரச் சொல்வார்கள். மதிப்பெண் குறைந்த என் சக நண்பர்கள் வீட்டுக்கு செல்ல பயப்படுவார்கள் "என் அப்பா அடி கொன்றுவிடுவார்,என் அம்மா சூடு வைப்பார்"என்று கூறி வீட்டை விட்டு ஓடிவிடுவேன் என்று கூட சொல்வார்கள் .ஆனால்,பாடங்களை விட சில கலைகளில்,விளையாட்டுகளில் அவர்கள் வல்லவர்கள்.அதை ஊக்கப்படுத்தியிருந்தால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமயிருந்திருக்கும்.

பள்ளிகளின் தரவரிசை அட்டையை மட்டுமே வைத்து மதிப்பிடக்கூடாது. ஒன்று அவர்களின் குறைகளை போக்க முயற்ச்சிக்க வேண்டும்.அல்லது,விருப்பமான துறைகளில் ஊக்கப்படுத்தவேண்டும். நம்முடைய கனவுகளை கண்டிப்பாக திணிக்க நினைத்தால், நம்மை விட்டு விலகிப்போய்விடுவார்கள்.

வாடிக்கையாளர்களையும்,மேலதிகாரிகளையும் திருப்திப்படுத்த சிரமங்களை மேற்கொள்ளும் நாம், பிள்ளைகளுக்காகவும் விட்டுக்கொடுத்துப் பழக வேண்டும்.
திரைப்படங்களுக்கும்,தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் பிள்ளைகளை கவனிக்க மறந்து விடுகிறோம்.

இந்த காலத்தில் குழந்தைகளுக்கு சுமை அதிகம்.பதினைந்து மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கிறார்கள்.அவர்களைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது.நாம் அனுபவித்த விளையாட்டுக்கள்,சுதந்திரம், உறவுகள் இன்று அவர்களுக்கு இல்லை ஆரோக்கியம் உட்பட .குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடவேண்டும் பொதி சுமக்கும் கழுதைகளாக அல்ல.

மனித வாழ்வு அற்புதமானது அதை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .வீண் சண்டைகளை மனைவிடமோ,பிள்ளைகளிடமோ, மற்றவரிடமோ போட்டுக்கொண்டிருப்பதை விட வாழ்க்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.குழந்தைகளை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பிள்ளைகள் நம் பிரதிகள் அதை அழகாக செதுக்கவேண்டும. சிதைத்து விடக்கூடாது .ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவைகளை நம்மால் சரி செய்து மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை நமக்கிருந்தால் நம் குழந்தைகளுக்கும் அது தொற்றி அவர்களால் எந்த சூழலையும் சமாளித்து வெற்றி பெற முடியும்.

தியாகங்கள்தான் வாழ்க்கை, தியாகத்தால் பிறந்தது நம் தேசம்.நம் தியாகம் நம் பிள்ளைகளை நெறிப்படுத்தும்.தங்க கூண்டுகளை ஏற்ப்படுத்தாமல் சிறகுகள் வளர்வதை வரவேற்ப்போம்.









என் எழுத்து தேர்ந்த எழுத்தாளரைப் போல் இல்லாமலிருக்கலாம்.இதைப் பொறுமையாக படித்த நண்பர்களுக்கு என் நன்றி! என் சிறகுகள் வளர்ந்து கொண்டிருக்கிறது நானும் ஒருநாள் வானில் உயர பறப்பேன் என்ற நம்பிக்கையுடன்...
பின்னூட்டமும் ,ஓட்டும் தந்து என் சிறகுகளுக்கு வளர்ச்சி ஏற்படுத்துங்கள் .
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, February 13, 2010

மிருகங்களை காப்போம்!

மிருகங்களுக்கும் மற்ற உயிர் இனம்களுக்கும் இழைக்கப்பட்டு வரும் ஹிம்சையை காணும்போது நம் கண்களில் ரத்தம்தான் பெருக்கெடுத்து ஓடும் .

இந்த உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மிருகங்கள் நிறைய துன்பத்தைக்கண்டு மிகவும் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவதை தடுக்க ஒரு சிறிய முயற்சியும் செய்ய முன் வராத மனித இனத்தை அரக்க இனம் என்று கூறுவதில் சிறிது கூட தவறு இருக்க முடியாது.

மனிதன் ஆடு,மாடுகளை வெட்டி அவைகளை உணவாக சாப்பிடுகிறான்.பூனை,எலியை சாப்பிடுகிறது.கழுகு கோழிக்குஞ்சை சாப்பிடுகிறது.சிங்கம்,புலி,போன்ற மிருகங்கள் மற்ற மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுகிறது.

கடவுள் உயிரினங்களை மற்ற உயிர்களுக்கு உணவாக படைத்துவிட்டார். இந்த சூழ்நிழையில் மனிதன் மிருகங்களை கொன்று சாப்பிடக்கூடாது என்ற கூற்று அர்த்தமற்றது.

ஆனால், மனிதன் மிருகங்களை கொள்ளும் வரையில் அவைகளை அன்புடன் கவனித்து வர வேண்டும். அவைகளை கொல்லும்போது மிகவும் குறைவான ஹிம்சை ஏற்ப்ப்படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆடுகளையும்,மாடுகளையும் சிறிது கூட இடைவெளி இல்லாதபடி லாரிகளில் அடைத்து பள்ளங்களும்,குழிகளும் நிறைந்த சாலைகளில் பல நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கும் நகரங்களுக்கு வேகமாக ஓட்டி செல்கிறார்கள். இவைகள் சிறிது கூட அசைய முடியாதபடி நின்றுகொண்டே பயணம் செய்கின்றன. இவைகளுக்கு தண்ணீர் கூட கொடுப்பதில்லை!

இந்த மிருகங்கள் நகருவதற்கு சிறிது கூட இடைவெளி இல்லாததினால் இவைகளுடைய கழுத்துக்கள் முறுக்கிக்கொண்டு விடுகின்றன.இவைகள் போய்ச்சேரவேண்டிய இடம் வந்ததும் அசையக்கூட முடிவதில்லை. கொலைககொண்டு அடித்து லாரியிலிருந்து கீழே தள்ளுகிறார்கள்.கீழே தள்ளும்போது சில ஆடுகளின் கால்கள் உடைந்து விடுகின்றன.நகர முடியாத இந்த ஆடுகளை ஒரு காலை மட்டும் பிடித்து இழுத்து செல்லும்போது,அந்த ஆடுகள் வேதனை தாங்காமல் அலறுவதை யாரும் கண்டுகொள்ளுவதில்லை.மேலும் பிரயனத்தின்போது வேதனையால் சில ஆடுகள் துடிதுடித்து இறந்தே போய்விடுகின்றன. அதயும் கூட வெட்டி விற்றுவிடுகிறார்கள்.

உணவாக பயன்படும் மிருகங்களை இப்படி கொடுமைப்படுத்தி கொல்லுவதுதான் மனிதப்பண்பா? மனிதன் பணத்திற்காக கொடிய பாவங்களை செய்ய சிறிதுகூட தயங்குவதில்லை.ஆடுகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றால் அதற்க்கு நேரம் பிடிக்கும்.பணச்செலவு ஆகும்.ஆடுகளை சௌகரியமாக எடுத்துசெல்ல வேண்டுமென்றால்,இன்னும் பல லாரிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் அப்போது நிறைய பணம் செலவாகும் . எப்படியும் சாகப்போகிற மிருகங்கள்தானே?"எனக்கு வேண்டியது பணம் .இந்த மிருகங்கள் படும் வேதனையை பற்றி எனக்கு கவலையில்லை "என்ற வியாபர நோக்கோடு பணக்கலாச்சாரத்தை மனிதன் பின்பற்ற தொடங்கிவிட்டான்.

ஒரு மிருகத்தின் எதிரில் இன்னொரு மிருகத்தைக் கொல்லக்கூடாது என்று சட்டமே சொல்கிறது.நமது நாட்டில் நூற்றுக்கணக்கான ஆடுகளை வரிசையாக நிறுத்தி ஒவ்வொரு ஆட்டின் தலையாக வெட்டி வருகிறார்கள்.நமக்கு இப்படிபாட்ட நிலை ஏற்ப்பட்டால் நம்முடைய மனங்கள் எப்படி துடிதுடிக்கும்? ஈழத்தில் ஏற்ப்பட்டபோது ரத்தம் கொதிக்கவில்லையா?

உணவுக்கு மட்டும் மனிதன் மிருகங்களை கொல்வதில்லை. உடைகளை தயாரிப்பதற்கும்,அழகு சாதனங்கள் தயாரிப்பதற்கும்,வாசனைப்பொருட்கள் தயாரிப்பதற்கும் ,சித்ரவதை செய்யப்படுகிறது.

பெரும்பாலான மிருகங்களின் தோல்கள் அவை உயிருடன் இருக்கும்போதே உரைக்கப்படுகின்றது .

முதலைகள் நீளவாட்டில் கீறி,வேதனையால் துடிதுடித்துக்கொண்டிருக்கும்போதே அவைகளின் தோல்கள் உரிக்கப்படுகின்றன .

ஆப்கானில் காரகுல் ஆடுகளுக்கு பிறக்கும் குட்டிகளின் தோல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.இந்த ஆட்டுக்குட்டியின் தோலுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது.நிறைய விலை கொடுத்து இந்த தோலை வாங்கிக்கொள்ள நிறைய பேர் தயாராயிருக்கிறார்கள்.இந்த ஆட்டுக்குட்டி பிறந்த பிறகு இதனுடைய தோலின் மிருதுத்தன்மையும் ,பளபளப்பும் குறைந்துவிடுகின்றன .தாய்மை பெற்ற ஆட்டை குறைப்பிரசவம் ஆகும் வரையில் இரும்புத்தடியால் அடித்து,குட்டி கீழே விழுந்தவுடனேயே தோல் உரிக்கப்பட்டுவிடுகிறது.

தெற்கு அமெரிக்காவில் சில மிருகங்களின் தோலை உரிக்க மிகவும் குரூரமான வழி கையாளப்படுகிறது.

பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை மலம் கழிக்கும் துவாரத்தின் வழியாக உடலுக்குள் நுழைத்து விடுகிறார்கள்.அந்த மிருகம் வேதனையால் துடிதுடித்து கதறி புரண்டு முடிவில் இறந்து விடுகிறது .அது சாகும்போது தோல் கழண்டு தானாகவே விழுந்துவிடுகிறது .

பாம்புகள்,முதலைகள்,ஓணான்கள்,மேலும் ஊர்ந்து செல்லும் பலவகை உயிரினங்களின் தோல்கள் கைப்பைகள் ,பர்ச்கள்,பெல்ட்டுகள்,போன்றவைகளை தயாரிப்பதற்குபயன்படுத்தி வருகிறார்கள் .

பாம்பின் தோலை உரிப்பதற்கு பாம்பின் தலையை ஒரு செடியின் மீது வைத்து அதன் தலையில் ஆணி அடித்து இறக்கி அந்த பாம்பை செடியோடு இணைத்து விடுகிறார்கள் .காலைக்கொண்டு பாம்பின் வாழை தரையில் அழுத்தி பிடித்து ,கூறிய கத்தியினால் பின் தலையிலிருந்து வாளின் நுனி வரை நீளமாக கீறி தோலை உருவி எடுக்கிறார்கள் .தோல் உரிக்கப்பட்ட இந்த பாம்பு இரண்டு ,மூன்று நாட்கள் வரை துடித்டித்து இறக்கின்றன.

எதியோப்பிய பூனைகள் ஒரு சிறிய கூண்டில் வாழ்நாள் முழுவதும் அடைத்து வைக்கப்படுகின்றன.இதனுடைய வாசனை சுரப்பியிலிருந்து எடுக்கப்படும் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கிறது .

ஒவ்வரு பத்து நாட்களுக்கு ,பூனையின் வேதனையை பொருட்படுத்தாது சுரண்டி எடுத்து விற்கிறார்கள்.

மிருக வதை தடுப்பதற்கு அரசாங்கம் ஒரு நிர்வாகத்தையே உருவாக்கி இருக்கிறது .நமது நாட்டில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களில்,இந்த நிர்வாகமும் ஒன்று .ஆனால்,அரசாங்கம் ,நீதிபதிகள்,போலீஸ்காரர்கள்,பொதுமக்கள், அனைவரும் இந்த நிறுவனத்திற்கு பக்க பலமாக நின்றால்தான் மிருகங்களுக்கு இழைத்து வரும் அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியும் .

இந்த பொருட்களை நாம் தேடி வாங்காது புறக்கணித்தாலே மிருகங்களுக்கு செய்யும் நன்மை .செய்வோமா?







இதுவரை பொறுமையாக படித்த நண்பர்களுக்கு நன்றி ,பின்னூட்டமும் ,ஒட்டுமே என்னை ஊக்கப்படுத்தும்...
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, January 25, 2010

மனதை உருக்கும் பாடல்

என் முதல் பதிப்பிற்கு நண்பர்களின் அத்துணை ஆதரவு நானே எதிர்பாராதது. அனைவர்க்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் .


குடியரசுதின நல் வாழ்த்துக்கள்


மனிதவாழ்வில் மகிழ்ச்சி,பக்தி,துக்கம்,கவலை,இன்னும் பிற உணர்ச்சிமிக்க
தருணங்களுக்கு பாடல்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.


இதற்க்கு மொழிபேதமோ,மதபேதமோ,இனபேதமோ கிடையாது .மேலும் இவைகளை வளர்க்கவே பாடல்கள் உதவியிருக்கிறது.


நாம் அதிக பாடல்களை ரசித்தாலும் ,சில பாடல்கள் மட்டுமே மனதில் நீங்காதிடம் பெற்று விடுகிறது. [அதுவும் சூழல்களை பொறுத்து மட்டுமே!] எப்போது கேட்டாலும் சில உணர்வுகளை உந்திதள்ளும்.


அப்படி என் உணர்வுகளை தூண்டிய பாடல்களில் ஒன்று! மணிரத்னம் இயக்கத்தில் ,வைரமுத்துவின் வைரவரிகளில் ,நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த"கன்னத்தில் முத்தமிட்டால் "படத்தில் அவரே உணர்ச்சிமிக்க பாடிய "வெள்ளை பூக்கள்"என்ற பாடல்.


இந்த பாடலின் மெட்டு,அதன் வரிகள்,அந்தக்குரல், என் உயிரை உருக்கும் !
அந்த பாடல் முடியும்போது என் கண்களில் கண்ணீர் மிச்சமிருக்காது.


இந்த பாடல் திரைப்படத்தில் பின்புலமாகவே ஒலிக்கும், வசனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் .அதுவும்,இலங்கை தமிழால்.


இலங்கை தமிழ்தான் எத்தனை அழகு! எனக்கு மிகவும் பிடிக்கும் .


இந்த பாடலின் வரிகளில் "எங்கு சிறு குழந்தை தன கைகள் நீட்டிடுமோ? அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே! எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாதோ வெள்ளை குயிலே ..."


போர் முடிந்து விட்டது ஆனால்.......









இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள் நன்றி!!!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் -அழிவின் பதிவு


இந்த படத்தை நம் பதிவர்கள் அதிகம் அலசி ஆராய்ந்துவிட்டனர் . ஆனால் என் வேலை அதுவல்ல ,இந்த படம் அதிலுள்ள தமிழ் .

நம் தமிழ் எவ்வளவு வார்த்தைகளை இழந்து விட்டது [நாம் அழித்து சிதைத்து விட்டிருக்கிறோம் ] என்பதை உணரவைத்தது .இவையெல்லாம் நாம் ஏற்கெனெவே அறிந்தவைதான் என்றாலும் திரைப்படம் என்ற ஊடகத்தின் மூலம் அது இன்னும் உணர்வுபூர்வமாக சிந்திக்கசெய்கிறது .

தமிழ் என்ற வார்த்தைமட்டுமே இனி தமிழில் இருக்கும் என்ற நிலை வந்தாலும் ஆச்சிரியப்படுவதர்க்கில்லை.

எங்கள் வீட்டு குழந்தை தமிழில் 20 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசையில் பின் தங்கியது .வினவியபோது "தமிழ் மட்டும் இல்லையென்றால் நான் முதலிடத்தில் இருப்பேன் "என்ற பதிலில் தமிழனாகிய எனக்கு பூமி பிளந்தது .

இந்த அவசரயுகத்தில் பொருளாதார யுத்தத்தில் இதைப்பற்றி சிந்திக்கவே நமக்கு நேரமில்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை .

உலகம் முழுவதும் தமிழினம் மட்டுமே பரவியிருக்கிறது .தமிழ் மொழி கேள்விக்குறியோடு நிற்கிறது .


வேற்று மொழி தொலைக்காட்சிகளும் ,திரைப்படங்களும் ,தமிழ் மொழி பேசிக்கொண்டிருக்கும்போது , நம் நடிகர்களும் ,நடிகைகளும் ,தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் ,வேற்று மொழி கலந்து பேசும்போது,

நான் என்னத்த சொல்ல ...

இந்தவேளையில் திரைப்படங்களுக்கும் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ,நடிக ,நடிகையர்க்கும்தான் தமிழ் மக்களிடம் அதீத ஈர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதும் இவைகள்தான் .


இதைபுரிந்துகொண்டு தமிழ் திரைப்படங்களும் ,தொலைக்காட்சிகளும் ,பத்த்ரிக்கைகளும் ,அதை சார்ந்த கலைஞர்களும், அவர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுத்துகொண்டிருக்கும் தமிழை ,உண்மையான தமிழை சிதைக்காமல் இருந்தால் தமிழ் நீண்ட நெடும்காலம் வாழும் என்பது என் தாழ்மையான கருத்து .

முடிந்தால் தமிழ் அறிஞர்களின் உதவியுடன் தமிழின் அழிந்த சொற்களை மீட்டெடுத்து, மக்களிடம் அவர்கள் சேர்க்கவும் முடியும் .

இந்த உணர்வுகளை ஊட்டிய செல்வராகவனுக்கு என் நன்றி !!!

மேலும், ஆயிரத்தில் ஒருவனில் ,சில குறைகள் இருந்தாலும் பார்க்கவேண்டிய திரைப்படமே !
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...