குடியரசுதின நல் வாழ்த்துக்கள்
மனிதவாழ்வில் மகிழ்ச்சி,பக்தி,துக்கம்,கவலை,இன்னும் பிற உணர்ச்சிமிக்க
தருணங்களுக்கு பாடல்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.
இதற்க்கு மொழிபேதமோ,மதபேதமோ,இனபேதமோ கிடையாது .மேலும் இவைகளை வளர்க்கவே பாடல்கள் உதவியிருக்கிறது.

நாம் அதிக பாடல்களை ரசித்தாலும் ,சில பாடல்கள் மட்டுமே மனதில் நீங்காதிடம் பெற்று விடுகிறது. [அதுவும் சூழல்களை பொறுத்து மட்டுமே!] எப்போது கேட்டாலும் சில உணர்வுகளை உந்திதள்ளும்.
அப்படி என் உணர்வுகளை தூண்டிய பாடல்களில் ஒன்று! மணிரத்னம் இயக்கத்தில் ,வைரமுத்துவின் வைரவரிகளில் ,நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த"கன்னத்தில் முத்தமிட்டால் "படத்தில் அவரே உணர்ச்சிமிக்க பாடிய "வெள்ளை பூக்கள்"என்ற பாடல்.

இந்த பாடலின் மெட்டு,அதன் வரிகள்,அந்தக்குரல், என் உயிரை உருக்கும் !
அந்த பாடல் முடியும்போது என் கண்களில் கண்ணீர் மிச்சமிருக்காது.
இந்த பாடல் திரைப்படத்தில் பின்புலமாகவே ஒலிக்கும், வசனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் .அதுவும்,இலங்கை தமிழால்.
இலங்கை தமிழ்தான் எத்தனை அழகு! எனக்கு மிகவும் பிடிக்கும் .
இந்த பாடலின் வரிகளில் "எங்கு சிறு குழந்தை தன கைகள் நீட்டிடுமோ? அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே! எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாதோ வெள்ளை குயிலே ..."
போர் முடிந்து விட்டது ஆனால்.......
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள் நன்றி!!!